தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக் கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் - திருப்பூரில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் பேட்டி

திருப்பூர்: தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக் கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் வீட்டின் முன்பு கூடி கண்டனம் தெரிவிப்போம், என திருப்பூரில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக் கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் வீட்டின் முன்பு கூடி கண்டனம் தெரிவிப்போம், என திருப்பூரில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒ.டி.டி யில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு, எனவும் அப்போது கருத்து தெரிவித்தனர்.

சமீபத்தில், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் ஒன்று, பாரதிராஜா தலைமையில், செப்., 14 சென்னையில் துவங்கப்பட்டது. அந்த நிகழ்வின்போது "எங்களிடம் இருக்கும் 100 தயாரிப்பாளர்கள் வலுவானவர்கள், மற்றவர்கள் நோஞ்சான்கள்'' என்கிற தொணியில் பாரதிராஜா செய்தியாளர் சந்திப்பின் போது பேசியுள்ளார்.

அவருடைய சர்ச்சையான கருத்தை கண்டித்து, தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நமக்கு நாமே அணியினர், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது பாரதிராஜா நோஞ்சான் என தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும், மேலும், அவர் பேசியதற்கான விளக்கம் என டிவிட்டர் பதிவில் அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு, செயலற்ற நிலையில், திரியும், தயாரிப்பாளர்களின் அவல நிலை, கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைகள், அவை என மேலும் தரக்குறைவாக பேசி உள்ளதாகவும், தெரிவித்தனர்.

எனவே, இதற்கு பாரதிராஜா உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு கூடி கண்டனத்தை தெரிவிப்போம், என தெரிவித்தனர்.

மேலும், சங்கம் ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும், தயாரிப்பாளர்களுக்கு நன்மைகள் ஏதும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஒ.டி.டி யில் படங்கள் திரையிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு, என்று தெரிவித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...