திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல் துறையை கண்டித்து, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல் துறையை கண்டித்து, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் சீத்தாராம் யெச்சூரி. இவர் டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக கூறி அவர் மீது, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை கண்டித்து, இன்று திருப்பூர் மாநகராட்சி எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீதாராம் எச்சூரி உட்பட ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் சீத்தாராம் யெச்சூரி. இவர் டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக கூறி அவர் மீது, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதை கண்டித்து, இன்று திருப்பூர் மாநகராட்சி எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீதாராம் எச்சூரி உட்பட ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.