கோவையில் பள்ளி ஆவணங்களை தர மறுக்கும் தனியார் கல்லூரியிடம் சான்றிதழ் பெற்று தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கைக் குழந்தையுடன் வந்த பெண் மனு!

கோவை: கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்மணி தனது பள்ளி ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாகவும் உடனடியாக அதனை பெற்று தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை: கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்மணி தனது பள்ளி ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாகவும் உடனடியாக அதனை பெற்று தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து வித்யா கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிறிஸ்த்துநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்ததாகவும் ஒரு வருடம் அங்கு படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்தியதாக தெரிவித்தார்.



இந்நிலையில், தனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் மூத்த மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது கணவர் நவீன்குமார் பெயிண்டிங் வேலைக்கு செல்லும் காரணத்தால் போதிய வருமானமின்றி தவிப்பதால் தானும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று அவருக்கு உதவிட எண்ணியதாக கூறிய அவர், இதற்காக தனது பள்ளி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது மூன்றாம் ஆண்டு பருவ தேர்வுக்கு செலுத்த வேண்டிய 11,000 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு சான்றிதழ்களை பெற்று கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் கூறியதாக தெரிவித்தார்.



தற்போது இரண்டாவதாக நான்கு மாதமே ஆன குழந்தை உள்ள நிலையில் போதிய வருமானமின்றி தவிப்பதாலும் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு செல்லும் இடங்களில் சான்றிதழ்களை நிர்வாக தரப்பினர் கேட்பதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சான்றிதழ்களை தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...