கோவை: சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜி. ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜி. ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று முன் தினம் இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இவரது அலுவலகம் முழுவதும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது அவர் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்து கொள்கிறார். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனை செல்வார்," என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று முன் தினம் இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இவரது அலுவலகம் முழுவதும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது அவர் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்து கொள்கிறார். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனை செல்வார்," என்றார்.