கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சங்கனூர் சாலை காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சந்துரு(16) பதினோரானம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாத காரணத்தால் சந்துரு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று தன்னுடைய செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மூர்சை அடைந்தார். இதையடுத்து, மாணவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சங்கனூர் சாலை காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சந்துரு(16) பதினோரானம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாத காரணத்தால் சந்துரு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று தன்னுடைய செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மூர்சை அடைந்தார். இதையடுத்து, மாணவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.