கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சங்கனூர் சாலை காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சந்துரு(16) பதினோரானம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாத காரணத்தால் சந்துரு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று தன்னுடைய செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மூர்சை அடைந்தார். இதையடுத்து, மாணவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...