கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மேற்கு தேவேந்திர வீதியில் நேற்று இரவு மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மேற்கு தேவேந்திர வீதியில் நேற்று இரவு மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நஞ்சுந்தாபுரத்தில் உள்ள தேவேந்திர வீதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நேற்று இரவு பலத்த காற்று வீசிய நிலையில், தீடீரென குடியிருப்பில் பகுதி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் இடையே உரசல் ஏற்பட்டு, குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் தீப்பிடித்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, ஒயர்களை சரி செய்தனர். இதையடுத்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நஞ்சுந்தாபுரத்தில் உள்ள தேவேந்திர வீதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நேற்று இரவு பலத்த காற்று வீசிய நிலையில், தீடீரென குடியிருப்பில் பகுதி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் இடையே உரசல் ஏற்பட்டு, குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் தீப்பிடித்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, ஒயர்களை சரி செய்தனர். இதையடுத்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.