திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், கடந்த 15 நாட்களாக நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான, தங்கவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், கடந்த 15 நாட்களாக நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான, தங்கவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தங்கவேல் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர், கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் தொழிற் சங்க தலைவராகவும் பதவி வகித்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தங்கவேல் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர், கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் தொழிற் சங்க தலைவராகவும் பதவி வகித்தார், என்பது குறிப்பிடத்தக்கது.