கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மகாளய அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மகாளய அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதில், குறிப்பாக அமாவாசை தினத்தன்று, இரவு கோயில் நடை திறந்திருப்பது வழக்கம்.

வரும் 16ம் தேதி புதன்கிழமை இரவு, 7:26 மணி முதல், 17ம் தேதி வியாழக்கிழமை மாலை, 5:24 மணி வரை இந்த மாதத்திற்கான அமாவாசை நடக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக, கோயில் நடை திறக்கப்படாது என, மாசாணியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவுப்படி, கொரோனா தொற்று காரணமாக இந்த முறை மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசையன்று இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை மூடப்படும். வழக்கம்போல் காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மட்டுமே, அம்மனை தரிசிக்க முடியும். மேலும் பக்தர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும், கட்டாயம் சமூக விலககளை கடைபிடிக்க வேண்டும், என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதில், குறிப்பாக அமாவாசை தினத்தன்று, இரவு கோயில் நடை திறந்திருப்பது வழக்கம்.
வரும் 16ம் தேதி புதன்கிழமை இரவு, 7:26 மணி முதல், 17ம் தேதி வியாழக்கிழமை மாலை, 5:24 மணி வரை இந்த மாதத்திற்கான அமாவாசை நடக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக, கோயில் நடை திறக்கப்படாது என, மாசாணியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவுப்படி, கொரோனா தொற்று காரணமாக இந்த முறை மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசையன்று இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை மூடப்படும். வழக்கம்போல் காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மட்டுமே, அம்மனை தரிசிக்க முடியும். மேலும் பக்தர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும், கட்டாயம் சமூக விலககளை கடைபிடிக்க வேண்டும், என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.