கோவை தெற்கு மண்டலத்தில்‌ ரூ.1.8 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ ரூ.1 கோடியே 8 இலட்சத்து 19 ஆயிரம்‌ மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ ரூ.1 கோடியே 8 இலட்சத்து 19 ஆயிரம்‌ மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எணி.90க்குட்பட்ட பாரதி நகா்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.40 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட பயணிகள்‌ நிழற்கூடத்தை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும்‌, ஹவுசிங்யூனிட்‌ என்‌.பிளாக்‌ பகுதியில்‌ ரூ.8.32 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, பாரதி நகர்‌ பகுதியில்‌ ரூ.16.95 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, அலமு நகர்‌ பகுதியில்‌ ரூ.7.85 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, சிறுவாணி நகர்‌ பகுதியில்‌ ரூ.8.74 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, பெருமாள்‌ நகர்‌ பகுதியில்‌ ரூ.19.986 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, கோவை காடன்‌ பகுதியில்‌ ரூ.21.95 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ TURIF திட்டத்தின்கீழ்‌ தார்தளம்‌ புதுப்பித்தல்‌ பணிக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தார்.

பின்னர்‌, 91வது வார்டுக்குட்பட்ட கே.பி.ஆர்‌ காலனி பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்.

அதனைத்‌ தொடர்ந்து, 91வது வார்டுக்குட்பட்ட சத்யா நகர்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8.90 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ இண்டர்லாக்‌ கற்கல்‌ தளம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, ரூ.15.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கான்கிரீட்‌ தளம்‌ மற்றும்‌ மழைநீர் வடிகால்‌ அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையினையும்‌ ஆகமொத்தம்‌ ரூ.1 கோடியே 8 இலட்சத்து 19 ஆயிரம்‌ மதிப்பிலான வளர்ச்சிப்‌ பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தும்‌, 16 இலட்சத்து 40 ஆயிரம்‌ மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சிபபணிகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி அவர்கள்‌, செயற்பொறியாளர்‌ டி.ஞஞானவேல்‌ அவர்கள்‌, உதவி செயற்பொறியாளர்‌ சி.சுந்தாராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ என்‌.லோகநாதன்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...