அவுட்டுக்காயால் நாக்கு பகுதி மிகவும் சிதறி, தாடை கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு உண்ண முடியாமல் கோவை மற்றும் கேரள வனப்பகுதியில் சுற்றி திரிந்த மக்னா யானை, இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் உயிரிழந்தது.
கோவை: அவுட்டுக்காயால் நாக்கு பகுதி மிகவும் சிதறி, தாடை கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு உண்ண முடியாமல் கோவை மற்றும் கேரள வனப்பகுதியில் சுற்றி திரிந்த மக்னா யானை, இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் உயிரிழந்தது.
'புல்டோசர்'என்ற அனைவராலும் அளிக்கப்பட்ட அந்த யானை, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கோவை மருதமலை பகுதியில் அவுட்டு காய் வாயில் வெடித்ததால், நாக்கு சிதறிய நிலையில் மிகுந்த வலியுடன், கோவை வனத்துறையினரால் கண்டறியப்பட்டது.
பாதிக்கபட்ட யானைக்கு, சிகிச்சை அளிக்க முயன்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆணைக்கட்டி வழியாக கேரளா பகுதிக்கு சென்று விட்டது. பின், மன்னார்காடு பகுதியில் வனத்துறையின் சார்பாக சிகிச்சை அளித்த போதும், அந்த யானை நீண்ட காலம் உயிர்வாழாது மற்றும் அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்களால் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.
இந்த நிலையில், கோவை மற்றும் கேரள வனப்பகுதியை ஒட்டி அந்த யானை தொடர்ந்து வலியில் திரிந்து வந்த நிலையில், இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் உயிரிழந்தது.
கேரள பகுதியில் புல்டோசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட, அந்த யானையின் சடலத்திற்கு அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள், அவர்கள் முறைப்படி, பூ, பழம் போன்றவற்றை படைத்து, அந்த யானைக்கு பிரியாவிடை அளித்தனர்.