மேட்டுப்பாளையத்தில் சாலையின் குறுக்கே சென்ற காட்டு பன்றி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காட்டு பன்றி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழப்பு.

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காட்டு பன்றி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழப்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய வெல்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசர், வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் நேற்று, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் சாலை, சமயபுரம் பகுதியில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றி ஒன்று சாலையை கடந்து உள்ளது. அதனால், தீடீரென வாகனத்தை நிறுத்த முடியாததால், இருசக்கர வாகனம் பன்றியின் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார், அங்கு, அப்துல் நாசரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது, அப்துல் நாசர் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்டமாக காட்டு பன்றியால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு நஷ்டஈடாக, அப்துல் நாசர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையில், வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், என வனத்துறை தொடர்ந்து அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...