கோவை பாரதியார் பல்கலைகழக சிண்டிகேட் குழு உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் பரிந்துரை..!

கோவை: கோவை பாரதியார் பல்கலைகழகத்தை நிர்வாகிக்க சிண்டிகேட் குழு செயல்பட்டு வருகிறது. இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சார்ந்தவர்களை தவிர, இருவர் வரை வெளியில் இருந்து உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

கோவை: கோவை பாரதியார் பல்கலைகழகத்தை நிர்வாகிக்க சிண்டிகேட் குழு செயல்பட்டு வருகிறது. இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சார்ந்தவர்களை தவிர, இருவர் வரை வெளியில் இருந்து உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

மூன்று ஆண்டுகள் வரை அவர்களது பதவி காலம் இருக்கும். தற்போது, வெளியில் இருந்து நியமிக்கப்பட்டவர்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் அப்பதவிக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால், கோவையை சேர்ந்த பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் கனகசபாபதி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இவர், பா.ஜ.க மாநிலத் துணை தலைவராக உள்ள நிலையில், இவரை நியமனம் செய்ய சட்டரீதியாக எந்த தடையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பல்கலைகழக ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்:

கடந்த முறையும் இவர் சிண்டிகேட் குழு உறுப்பினராக இருந்தார். எனவே, இந்த முறையும் இவரையே அப்பதவிக்கு நியமிப்பதற்கு பதிலாக, வேறு யாருக்காவது வாய்ப்பளிக்கலாம். மேலும், கடந்த முறை அவர் நியமனம் செய்யப்பட்ட போது, அவர் கட்சி சார்பாக எந்த பதவியும் வகிக்கவில்லை. ஆனால், இம்முறை அவர் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவராக உள்ளார். இதனால், பல்கலைகழகத்தினர் மத்தியில் சற்று அதிருப்தி நிலவி வருகிறது,, என்றார்.

இது குறித்து பேராசிரியர் கனகசபாபதி கூறுகையில்:

நான் கல்வியாராக பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். 15 வருடங்களுக்கும் மேலாக கல்வி பணியில் உள்ளேன். ஆளுநர் நியமனத்திற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்ற பதவி காலத்திலும், நான் எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நேர்மையாக செய்துள்ளேன். சிண்டிக்கேட் குழுவிலும், எந்த எதிர்ப்புகளும் எழவில்லை.

எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட நேர்மையாக செய்வேன். நிர்வாக ரீதியாக யாருக்கும் எதுக்காகவும் பரிந்துரை செய்தது இல்லை, என்றார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...