கோவை: உயிர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தனியார் நிறுவனத்தை தொடங்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: உயிர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தனியார் நிறுவனத்தை தொடங்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையை கோவை பயோ வேஸ்ட் கழிவு மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பாக தொடங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், ஆலை தொடங்கப்பட்டால் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதோடு ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிப்படைய வாய்ப்பாக இருப்பதால் இதனை துவங்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி கூறுகையில், நிலத்தடி நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டால் வாழ முடியாத சூழல் உருவாகும் எனவும் புதிதாக தொடங்க இருக்கும் இந்நிறுவனத்தை துவங்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், புதிதாக திறக்க உள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாகம் இங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு, உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்தால் ஒன்றும் பிரச்சனை வராது என்று கூறுவதாகவும் பல கோடி செலவில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு உதவிகள் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவிப்பதாக கூறினர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையை கோவை பயோ வேஸ்ட் கழிவு மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பாக தொடங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், ஆலை தொடங்கப்பட்டால் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதோடு ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிப்படைய வாய்ப்பாக இருப்பதால் இதனை துவங்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி கூறுகையில், நிலத்தடி நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டால் வாழ முடியாத சூழல் உருவாகும் எனவும் புதிதாக தொடங்க இருக்கும் இந்நிறுவனத்தை துவங்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், புதிதாக திறக்க உள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாகம் இங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு, உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்தால் ஒன்றும் பிரச்சனை வராது என்று கூறுவதாகவும் பல கோடி செலவில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு உதவிகள் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவிப்பதாக கூறினர்.