கோவை: கோவையில் காவலர்களிடையே கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் காவலர்களிடையே கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் பேசுகையில், கொரோனா தொற்று கண், மூக்கு, வாய் வழியாக எளிதில் பரவும் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகர காவலில் பணிபுரியும் காவலர்களிடையே நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது என்றார்.
கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் காவலர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் இது சக காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றவர், பாதுகாப்புக்காக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, கபசுர குடிநீர் அருந்துவது, வெளியில் சென்று வரும்போது குளிப்பது உள்ளிட்டவைகளை பின்பற்றுவதோடு குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோல, விடுமுறையில் சென்று பணிக்கு திரும்பும் காவலர்கள் பணியின் போது பாதுகாப்பாக இருப்பது போல விடுமுறையில் செல்லும் போதும் அதே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து முககவசம், கையுறை, கிருமி நாசினி, கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு அடங்கிய உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார். மேலும், மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், குற்றபிரிவு துணை ஆணையர் உமா, தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் பேசுகையில், கொரோனா தொற்று கண், மூக்கு, வாய் வழியாக எளிதில் பரவும் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகர காவலில் பணிபுரியும் காவலர்களிடையே நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது என்றார்.
கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் காவலர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் இது சக காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றவர், பாதுகாப்புக்காக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, கபசுர குடிநீர் அருந்துவது, வெளியில் சென்று வரும்போது குளிப்பது உள்ளிட்டவைகளை பின்பற்றுவதோடு குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல, விடுமுறையில் சென்று பணிக்கு திரும்பும் காவலர்கள் பணியின் போது பாதுகாப்பாக இருப்பது போல விடுமுறையில் செல்லும் போதும் அதே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து முககவசம், கையுறை, கிருமி நாசினி, கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு அடங்கிய உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார். மேலும், மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், குற்றபிரிவு துணை ஆணையர் உமா, தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.