கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தையும் கடந்து பரவி வரும் நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தையும் கடந்து பரவி வரும் நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பாக தினமும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகளை வெளியிடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ளுதல், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம், மருத்துவர்கள் பணியாளர்கள் போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்தல், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருத்தல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு, போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோவை மாநகர பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களிடமிருந்து பிறருக்கு தொற்று பரவாமல் அவர்களை விரைவாக தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட உதவி பொறியாளர் நிலையில் குழு அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தினமும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட நபர்கள் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வரும் நாட்களில், பரிசோதனைகளை, மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...