பொள்ளாச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால் நோய்த்தொற்று அதிகரிப்பதாக நகர திமுகவினர் குற்றச்சாட்டு!

கோவை: கொரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால், பொள்ளாச்சியில் நோய்த்தொற்று அதிகரிப்பதாக நகர திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை: கொரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால், பொள்ளாச்சியில் நோய்த்தொற்று அதிகரிப்பதாக நகர திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 7 நாட்கள் வரை தாமதம் ஆவதால், பாதிக்கப்பட்ட நபர் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.



இந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால் ஏராளமான பொதுமக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக, திமுக நகர கழக பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் திமுகவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய திமுக நகர கழக பொறுப்பாளர் மருத்துவர். வரதராஜன், நோய்த்தொற்றை குறைக்க வேண்டுமென்றால் பரிசோதனை முடிவுகள் ஒரே நாளில் கிடைக்கும்படி அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரே நாளில் முடிவுகள் வந்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுபடுத்த முடியும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...