கோவை: கோவையில் நில அபகரிப்பு செய்ததாக பாஜக பிரமுகர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவை: கோவையில் நில அபகரிப்பு செய்ததாக பாஜக பிரமுகர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள், பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்து இடத்தையும் அபகரித்து விட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து கண்ணம்மாள் அளித்துள்ள மனுவில், கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டின் எதிர்புறம் வசித்து வந்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மளிகை கடை நடத்த போக்கியத்திற்கு இடம் வேண்டுமென்று தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாக கூறியதாக தெரிவித்து இருந்த அவர், தனது மகன் மற்றும் மகளிடம் கேட்டுச் சொல்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் 50,000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கி உள்ளதாகவும் உடனடியாக அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்திய ஆறுமுகம் மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தன்னை ஏமாற்றி கை நாட்டு பெற்றதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், ரூ.50 ஆயிரம் தன்னிடம் கொடுத்த ஆறுமுகம் இரண்டு செண்ட் வீட்டையும் ஒரு வார காலத்திற்குள் எழுதி தரும்படி கட்டாயப்படுத்திய போது, போக்கியத்திற்கு தானே இடம் கொடுத்தேன் என்று கேட்டபோது, நான் விற்று விட்டதாக என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று உள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல, ஆறுமுகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை தரை மட்டம் செய்ததாக குற்றம் சாட்டி இருந்த கண்ணம்மா, இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அரசியல் பிரமுகர் என்ற காரணத்தால் காவலர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் அவரது மகனிடம் கேட்டபோது, அவர்கள் தனது மகள் ராணியை தாக்கியதுடன் சாதி ரீதியாக திட்டி பேசியதாகவும், தனது அறியாமையை பயன்படுத்தி வீட்டை இடித்து நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள், பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்து இடத்தையும் அபகரித்து விட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து கண்ணம்மாள் அளித்துள்ள மனுவில், கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டின் எதிர்புறம் வசித்து வந்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மளிகை கடை நடத்த போக்கியத்திற்கு இடம் வேண்டுமென்று தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாக கூறியதாக தெரிவித்து இருந்த அவர், தனது மகன் மற்றும் மகளிடம் கேட்டுச் சொல்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் 50,000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கி உள்ளதாகவும் உடனடியாக அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்திய ஆறுமுகம் மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தன்னை ஏமாற்றி கை நாட்டு பெற்றதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், ரூ.50 ஆயிரம் தன்னிடம் கொடுத்த ஆறுமுகம் இரண்டு செண்ட் வீட்டையும் ஒரு வார காலத்திற்குள் எழுதி தரும்படி கட்டாயப்படுத்திய போது, போக்கியத்திற்கு தானே இடம் கொடுத்தேன் என்று கேட்டபோது, நான் விற்று விட்டதாக என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று உள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல, ஆறுமுகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை தரை மட்டம் செய்ததாக குற்றம் சாட்டி இருந்த கண்ணம்மா, இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அரசியல் பிரமுகர் என்ற காரணத்தால் காவலர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் அவரது மகனிடம் கேட்டபோது, அவர்கள் தனது மகள் ராணியை தாக்கியதுடன் சாதி ரீதியாக திட்டி பேசியதாகவும், தனது அறியாமையை பயன்படுத்தி வீட்டை இடித்து நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.