கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதி - பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனியார் கல்லூரி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதி, என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள், தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட மானவாரி சாகுபடி அதிகளவில் செய்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் விளைவிக்கும் மானாவாரி பயிர்கள், காய்கறிகளை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தையில் கொண்டுவந்து, ஏலமிட்டு விற்பனை செய்கின்றனர்.

இங்கிருந்து, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த சந்தைக்கு, காய்கறிகள், வாங்குவதற்கும் விற்பதற்கும் வரும் வியாபாரிகள், மற்றும் விவசாயிகள், அவர்கள் கொண்டு வரும் காய்கறிகளை, சரக்கு வாகனங்கள் கொண்டுவருவது வழக்கம்.

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை பணிகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கு வரும் வியாபாரிகளுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.



இந்நிலையில், கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு, கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளித்து, வாகனத்தில் வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் விதித்து, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...