'நிலையான வாக்குகளை அள்ளி தருவோம்', கோவையில் தமிழக முதல்வருக்தனியார் கல்லூரி மாணவர்கள் போஸ்டர்..!

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனியார் கல்லூரி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.


இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, அனைத்து மாணவர்களும், அரியர் வைத்துள்ள மாணவர்கள் உட்பட அனைவரும் பாஸ் என்ற தமிழக முதல்வரின் உத்தரவை மாணவர்கள் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில், இரண்டாவது முறையாக, கோவையில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்.

கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை, காந்திபுரம், ரெயில் நிலையம் என மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.



அதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வி.எல்.பி கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அந்த போஸ்டரில், நன்றிகளை நிலையான வாக்குகள் அள்ளி தருவோம், என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.



அதே போன்று, வேறு ஒரு போஸ்டரில் மாணவர்களின் ஒளிவிளக்கே, மாணவர்களின் கல்விக் கடவுள் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...