நீலகிரி: உதகை தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: உதகை தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நொண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தற்போது இவர் குடும்பத்தாருடன் எல்ல நள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், குளத்தில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உதகை நகர மத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட சடலம் நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நொண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தற்போது இவர் குடும்பத்தாருடன் எல்ல நள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், குளத்தில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உதகை நகர மத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட சடலம் நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.