கோவையில் 168 நாட்களுக்குப் பிறகு ப்ரோஜோன் வணிக வளாகம் இன்று மீண்டும் திறப்பு..!

கோவை: கோவையில் 168 நாட்களுக்குப் பிறகு ப்ரோஜோன் வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் 168 நாட்களுக்குப் பிறகு ப்ரோஜோன் வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 16ம் தேதி ப்ரோஜோன் வணிக வளாகம் மூடப்பட்டது.



இந்நிலையில், வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று அவ்வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 168 நாட்களுக்குப் பிறகு பொதுமக்களுக்கு வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



வணிக வளாகத்திற்கு வரும் பொதுமக்கள் செல்போனில் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்து விவரங்களை பதிவிட்ட பின்னர் உடல் வெப்ப நிலை பரிசோதித்து அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வணிக வளாகம் இயங்கி வருவதாகவும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் வணிக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவ்வணிக வளாகத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

அதேபோல, பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு வணிக வளாகம் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாடிக்கையாளர் பாதுகாப்பை மையப்படுத்தி கடைகள் இயங்கி வருவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

168 நாட்களுக்குப் பிறகு வணிக வளாகம் திறக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...