பல்லடம் அருகே முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை: பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல்
இன்று ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் அவசர சேவைகள் தவிர அனைத்து மளிகை கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை அருகே கடை எண் 2264, அருகே உள்ள மதுபான கூடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. அந்த, கடையின், பின்புறமும், வெளியிலும் மது பிரியர்கள் தங்களுக்கான மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர்.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த பல்லடம் போலீசார், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், விற்பனை செய்து வைத்திருந்த 6,500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து, இந்த சம்பவம், தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.