பல்லடம் அருகே முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை: பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

பல்லடம் அருகே முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை: பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல்


இன்று ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் அவசர சேவைகள் தவிர அனைத்து மளிகை கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை அருகே கடை எண் 2264, அருகே உள்ள மதுபான கூடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. அந்த, கடையின், பின்புறமும், வெளியிலும் மது பிரியர்கள் தங்களுக்கான மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். 



இது குறித்து பல்லடம் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த பல்லடம் போலீசார், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



மேலும், விற்பனை செய்து வைத்திருந்த 6,500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து, இந்த சம்பவம், தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...