கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 37 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன, என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 37 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன, என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் தேதி மாநகராட்சி சார்பாக மண்டலத்திற்கு தலா ஒரு வாகனம் வீதம் 5 மண்டலங்களுக்கு 5 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்களை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவண் குமார், கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அதன்பின், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் 32 சுகாதார நிலையங்களுக்கும் 32 நடமாடும் பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம், நேற்று வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், மக்கள் வசிக்கும் இடம் அல்லது கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் அப்பகுதிகளுக்கு செல்லும்.
"வாகனங்களில் உள்ள நவீன உபகரணங்கள், கருவிகள் உதவியுடன் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் 37 நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன," என்றார்.
கடந்த 25ம் தேதி மாநகராட்சி சார்பாக மண்டலத்திற்கு தலா ஒரு வாகனம் வீதம் 5 மண்டலங்களுக்கு 5 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்களை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவண் குமார், கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அதன்பின், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் 32 சுகாதார நிலையங்களுக்கும் 32 நடமாடும் பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம், நேற்று வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், மக்கள் வசிக்கும் இடம் அல்லது கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் அப்பகுதிகளுக்கு செல்லும்.
"வாகனங்களில் உள்ள நவீன உபகரணங்கள், கருவிகள் உதவியுடன் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் 37 நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன," என்றார்.