கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 650 படுக்கைகளுடன், பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைகழங்களில் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 650 படுக்கைகளுடன், பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைகழங்களில் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக, பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியில் சுமார் 450 படுக்கைகளுடனும், அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியில் சுமார் 200 படுக்கைகளுடனும் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, ESI மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இதுவரை 13,358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக, பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியில் சுமார் 450 படுக்கைகளுடனும், அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியில் சுமார் 200 படுக்கைகளுடனும் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, ESI மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இதுவரை 13,358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.