கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில், ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அகற்றப்படாததால், அணுகு சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில், ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அகற்றப்படாததால், அணுகு சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில், ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 550 மீட்டர் நீளம், 12 மீ அகலம் கொண்ட இந்த மேம்பால பணிகள், சுமார் ரூ.20 கோடி செலவில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன.

தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை என சொல்லக்கூடிய சர்வீஸ் சாலை, மட்டும் அமைக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.

இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில், வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:

மின்கம்பிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை, மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாக்கடைகளும் புதுப்பிக்கப்படவில்லை, இதுபோன்ற, காரணங்களால் அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன, என்றார்.

கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில், ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 550 மீட்டர் நீளம், 12 மீ அகலம் கொண்ட இந்த மேம்பால பணிகள், சுமார் ரூ.20 கோடி செலவில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன.
தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை என சொல்லக்கூடிய சர்வீஸ் சாலை, மட்டும் அமைக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.
இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில், வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
மின்கம்பிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை, மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாக்கடைகளும் புதுப்பிக்கப்படவில்லை, இதுபோன்ற, காரணங்களால் அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன, என்றார்.