ஆவாரம்பாளையம் மேம்பாலம் பணிகள் 99 சதவீதம் நிறைவு; மின்கம்பிகள் அகற்றப்படாததால் அணுகு (service) சாலை அமைப்பதில் சிக்கல்

கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில், ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அகற்றப்படாததால், அணுகு சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில், ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அகற்றப்படாததால், அணுகு சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில், ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 550 மீட்டர் நீளம், 12 மீ அகலம் கொண்ட இந்த மேம்பால பணிகள், சுமார் ரூ.20 கோடி செலவில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன.



தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை என சொல்லக்கூடிய சர்வீஸ் சாலை, மட்டும் அமைக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.



இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில், வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும்.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:



மின்கம்பிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை, மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாக்கடைகளும் புதுப்பிக்கப்படவில்லை, இதுபோன்ற, காரணங்களால் அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன, என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...