சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில்  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருவர் பிடிபட்டனர்

சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில்  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருவர் பிடிபட்டனர்

கோவை: சென்னையில் 2 கோடி பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில், தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், ஆறு பேரை சென்னை போலீசார் தேடிவந்தனர். இதில், நான்கு பேர் பிடிபட்ட நிலையில்,கோவையைச் சேர்ந்த அப்துல் காதர் மற்றும் சிக்கந்தர் என்ற இருவரை, போலீஸ்சார் தேடி வந்தனர். 

இந்நிலையில், கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு பேரை, ஆனைமலை வழியாக தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை முக்கோணம் பகுதியில், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, கோவையை சேர்ந்த, சிக்கந்தர் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரும், 4 சக்கர வாகனத்தில் வந்த போது,ஆனைமலை போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 

விசாரணையில், இருவரும் சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் ஆனைமலை போலீசார் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...