சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில்  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருவர் பிடிபட்டனர்

சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில்  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருவர் பிடிபட்டனர்

கோவை: சென்னையில் 2 கோடி பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில், தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், ஆறு பேரை சென்னை போலீசார் தேடிவந்தனர். இதில், நான்கு பேர் பிடிபட்ட நிலையில்,கோவையைச் சேர்ந்த அப்துல் காதர் மற்றும் சிக்கந்தர் என்ற இருவரை, போலீஸ்சார் தேடி வந்தனர். 

இந்நிலையில், கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு பேரை, ஆனைமலை வழியாக தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை முக்கோணம் பகுதியில், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, கோவையை சேர்ந்த, சிக்கந்தர் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரும், 4 சக்கர வாகனத்தில் வந்த போது,ஆனைமலை போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 

விசாரணையில், இருவரும் சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் ஆனைமலை போலீசார் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...