கோவை: ஏசிசி தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகயில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கோவை: ஏசிசி தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகயில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக அருகில் வசித்து வரும் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நேற்று சிமென்ட் தொழிற்சாலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், தொழிற்சாலை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அப்பகுதி மக்கள் தொழிற்சாலை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

வீடுகளின் சுவர், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகளில் தூசு படர்ந்து இருப்பதை ஆய்வின் போது அறிந்தனர்.
இதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்தினர், ஒரு மாத காலத்தில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக அருகில் வசித்து வரும் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நேற்று சிமென்ட் தொழிற்சாலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், தொழிற்சாலை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அப்பகுதி மக்கள் தொழிற்சாலை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
வீடுகளின் சுவர், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகளில் தூசு படர்ந்து இருப்பதை ஆய்வின் போது அறிந்தனர்.
இதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்தினர், ஒரு மாத காலத்தில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.