கோவையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று..! கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டம்!

கோவை: கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் நாள்தோறும் சுமார் 200 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இதனிடையே கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அவர்களின் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சுமார் 4 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சிவனந்தா காலனி, பீளமேடு தனியார் பள்ளி கூடம் உள்பட 5 இடங்களில் கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்படாது.

மேலும், மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று மரணத்தை குறைக்கும் வகையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வேறு ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் டிரைஏஜி பரிசோதனை மையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்து அவர்களை இ.எஸ்.ஐ. அனுப்புவதா அல்லது கொடிசியா கொரோனா சிகிச்சை மையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்புவதா என்று முடிவு செய்யப்படும்.

அதேபோல, கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் எந்தெந்த தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்தி கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, எதனால் இந்த பகுதியில் அதிக தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டறிவது உள்ளிட்டவை மேற்கொள்ள உள்ளோம். இதன்மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...