கோவை: கோவை, பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுவனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
கோவை: கோவை, பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுவனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
இது குறித்து, காவல்துறை தரப்பில் கூறுகையில்: பாதிக்கப்பட்ட சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும், சிறுவன் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்ததாகவும், தெரிவித்தனர்.
இருவரது வீடுகளும், அருகருகே உள்ள நிலையில், சம்பவதன்று சிறுவன் அந்த சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறினர்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.