கோவை: கோவையில் அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
கோவை: கோவையில் அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்களும், நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
இந்த மருத்துவமனையில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனை 24/7 ஆக்ஸிஜன் காப்பு, CT Scan மற்றும் Lab சேவைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட உள்ளது. தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆரம்ப HRCT- Chest CORADS score அடிப்படையில் அனைத்து பரிசோதனைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.