கோவை: பொள்ளாச்சி நகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதை, தொடர்ந்து பொள்ளாச்சி டிஎஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை: பொள்ளாச்சி நகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதை, தொடர்ந்து பொள்ளாச்சி டிஎஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ஆர்.பொன்னாபுரம் பிரிவு அருகே தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்ததில், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அன்சார்முகமது (22), (ஆட்டோமொபைல் டிப்ளமோ பட்டதாரி), அதே பகுதியை சேர்ந்த நவாஸ் ஷெரீப் (22), (பி.காம் பட்டதாரி), ஆகிய இருவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், பல்வேறு இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தாலுக்கா போலீசார், இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ஆர்.பொன்னாபுரம் பிரிவு அருகே தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்ததில், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அன்சார்முகமது (22), (ஆட்டோமொபைல் டிப்ளமோ பட்டதாரி), அதே பகுதியை சேர்ந்த நவாஸ் ஷெரீப் (22), (பி.காம் பட்டதாரி), ஆகிய இருவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், பல்வேறு இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தாலுக்கா போலீசார், இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனர்.