கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு, கொரானோ காலகட்டத்தில் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்கள் உற்பத்தி விலைக்கே புடவைகளை வாங்கி பயன் பெற்றனர்.
இதனால், வேலைய்ப்பின்றி நெசவாளர்கள் முடங்கியிருந்த சூழ்நிலையில் உற்பத்தியாளர்களின் இந்த அறிவிப்பு நெசவாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பினை அளித்தது.
தற்போது, அங்குள்ள நெசவாளர்கள் திருமண விசேஷங்களில் பெண்களால் அதிகம் உடுத்தப்படும், சாப்ட் சில்க் எனப்படும் இடை குறைவான, மென்மை பட்டு சேலைகளை உற்பத்தி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவ டிசைன்கள் கொண்ட பட்டுப் புடவைகள்அறிமுக விழா இன்று சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் மூலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி தொழிலை மேம்படுத்தும் விதமாக எதிர்வரும் திருமண விஷயங்களுக்காக புதிய டிசைன்களில் செய்யப்பட்ட திருமணப்பட்டுப் புடவைகள் மற்றும் பல வண்ணங்களில், பல வித டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சாப்ட் சில்க் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
மேலும், நெசவாளர்களுக்கு கொரோனாவால் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கைத்தறி உடைகளை வாங்கி, அவர்கள் வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்க வேண்டும், என சிறுமுகை பட்டு உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு, கொரானோ காலகட்டத்தில் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்கள் உற்பத்தி விலைக்கே புடவைகளை வாங்கி பயன் பெற்றனர்.
இதனால், வேலைய்ப்பின்றி நெசவாளர்கள் முடங்கியிருந்த சூழ்நிலையில் உற்பத்தியாளர்களின் இந்த அறிவிப்பு நெசவாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பினை அளித்தது.
தற்போது, அங்குள்ள நெசவாளர்கள் திருமண விசேஷங்களில் பெண்களால் அதிகம் உடுத்தப்படும், சாப்ட் சில்க் எனப்படும் இடை குறைவான, மென்மை பட்டு சேலைகளை உற்பத்தி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவ டிசைன்கள் கொண்ட பட்டுப் புடவைகள்அறிமுக விழா இன்று சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் மூலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி தொழிலை மேம்படுத்தும் விதமாக எதிர்வரும் திருமண விஷயங்களுக்காக புதிய டிசைன்களில் செய்யப்பட்ட திருமணப்பட்டுப் புடவைகள் மற்றும் பல வண்ணங்களில், பல வித டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சாப்ட் சில்க் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
மேலும், நெசவாளர்களுக்கு கொரோனாவால் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கைத்தறி உடைகளை வாங்கி, அவர்கள் வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்க வேண்டும், என சிறுமுகை பட்டு உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.