உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கோவை: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்து பிஏபி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம் போன்ற அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருமூர்த்தி அணையில் 900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், பி.ஏ.பி 2ம் மண்டலத்திற்கு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனவே, அதற்கு முன்னதாக உப்பாறு அணைக்கு, அரசூர் வழியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், அத்திக்கடவு -அவினாசி திட்டம் போன்று உப்பாறு அணைக்கு, அரசூர் சட்டரிலிருந்து இருந்து புதை குழாய் மூலம் நீரை எடுத்து வந்து உப்பாறு அணையை நிரப்பினால் உபரிநீர் வீணாகமல் தடுக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும், எனவும், இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...