கோவை: திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு ஆகியவை நடத்தி 2 கோடி வரை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை: திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு ஆகியவை நடத்தி 2 கோடி வரை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர், அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் அப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக ஏலச் சீட்டு, பள்ளி சீட்டு, பண்டு சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுகள் என பலவிதமான சீட்டுகள் நடத்தி வந்துள்ளார்.
இதன் அடிப்படையில், அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவரிடம் சீட்டுக்கு சேர்ந்துள்ளனர். தவணைத் தொகைகளை சரியாக செலுத்தி வந்த சூழ்நிலையில், சீட்டு முடிந்து ஒரு மாத காலமாகியும் பணம் தராமல் இழுத்தடித்து உள்ளார்.
இது குறித்து அவர், வீட்டிற்கு பணம் செலுத்திய மக்கள் கேட்கச் சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை கண்டுபிடித்து உடனடியாக தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
அப்பகுதியில் சுமார் 2000 பேர் வரை சீட்டு சேர்ந்துள்ளதாகவும், 2 கோடி வரை மோசடி நடந்து இருக்கும், எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருப்பூர், அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் அப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக ஏலச் சீட்டு, பள்ளி சீட்டு, பண்டு சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுகள் என பலவிதமான சீட்டுகள் நடத்தி வந்துள்ளார்.
இதன் அடிப்படையில், அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவரிடம் சீட்டுக்கு சேர்ந்துள்ளனர். தவணைத் தொகைகளை சரியாக செலுத்தி வந்த சூழ்நிலையில், சீட்டு முடிந்து ஒரு மாத காலமாகியும் பணம் தராமல் இழுத்தடித்து உள்ளார்.
இது குறித்து அவர், வீட்டிற்கு பணம் செலுத்திய மக்கள் கேட்கச் சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை கண்டுபிடித்து உடனடியாக தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
அப்பகுதியில் சுமார் 2000 பேர் வரை சீட்டு சேர்ந்துள்ளதாகவும், 2 கோடி வரை மோசடி நடந்து இருக்கும், எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.