கோவை தெலுங்குபாளையம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கோவை: கோவை தெலுங்குபாளையம் 74 வது வார்டு பகுதியில், அதிமுக வார்டு செயலாளராக உள்ளவர் கதிர்வேல். இவரது சகோதரரான, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்பழகன் என்பவர் ராஜேஸ்வரி கார்டன் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

கோவை: கோவை தெலுங்குபாளையம் 74 வது வார்டு பகுதியில், அதிமுக வார்டு செயலாளராக உள்ளவர் கதிர்வேல். இவரது சகோதரரான, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்பழகன் என்பவர் ராஜேஸ்வரி கார்டன் பகுதியில் குடியிருந்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், அன்பழகன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த அவரது ஹோண்டா ஷைன், இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து உள்ளனர். இதில், இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து அன்பழகன் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கபட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...