கோவையில் ஊராட்சி மன்றத்‌ தலைவரை ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு!

கோவை: கோவை சுல்தான் பேட்டை அருகே ஊராட்சி மன்றத்‌ தலைவரை ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.









கோவை: கோவை சுல்தான் பேட்டை அருகே ஊராட்சி மன்றத்‌ தலைவரை ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவை சுல்தான் பேட்டை, ஊராட்சி ஒன்றியம்‌ ஜே.கிருஷ்ணாபுரம்‌ ஊராட்சி மன்றத்‌ தலைவராக உள்ள சரிதாவை, அதே பகுதியில் வசித்து வரும்‌ உசிலைமணி (௭) பாலசுப்பிரமணியம்‌ என்பவர்‌, ஊராட்சி மன்ற அலுவலகத்தில்‌ வந்து பொதுமக்களுக்கு பணி செய்ய விடாமல்,‌ தாழ்த்தப்பட்டவர் என்று தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாக, சரிதா மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், ஊராட்சி எல்லை தகவல்‌ பலகையில்‌ மற்றும்‌ அலுவலக கட்டிடத்தில்‌ அவரது பெயர்‌ எழுத விடாமல்‌ தடுத்து வருவதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்தவர் என்று திட்டியும், அலுவலகத்தில்‌ உட்காரவிடாமல்‌ மிரட்டி வந்ததாக, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) ஊராட்சி மன்ற அலுவலகத்தில்‌ வேலை செய்து கொண்டிருந்த போது அலுவலகத்தில் நுழைந்த‌ பாலசுப்பிரமணியம், "ஏன்டி, நீ தாழ்த்தப்பட்ட ஜாதியைச்‌ சேர்ந்தவள்‌. எனக்கு மரியாதை கொடுக்காமல்‌, தலைவர்‌ சீட்டில்‌ உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்"‌, என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்‌, என ஊராட்சி தலைவர், சரிதா தெரிவித்துள்ளார். 

மேலும்‌, இனிமேற்கொண்டு ஊராட்சி மன்றத்‌ தலைவர் சீட்டில்‌ உட்கார்ந்தால்‌, உன்னைக்‌ கொன்று விடுவேன்,‌ என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார், என்று சரிதா தெரிவித்தார். 

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல்‌ விடுத்ததால் வேலைக்கு வர, பயமாக உள்ளதாகவும், ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை செய்து விடுவேன்‌ என மிரட்டிய நபர்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஜே.கிருஷ்ணாபுரம்‌ ஊராட்சி மன்றத்‌ தலைவர், சரிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று மனு அளித்தார்.



Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...