கொரோனா பாதித்த பெண்ணிற்கு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த கோவை ESI மருத்துவ குழு..!

கோவை: கோவை வேடப்பட்டியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் குடல் இறக்க நோயால், சில வருடங்களாக அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். 

அது மட்டுமல்லாமல், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சினைகளும் இருந்தன. இந்த நிலையில், குடல் இரக்கத்திற்குசிகிச்சை பெறவேண்டி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் செய்யவேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போதைய, சூழ்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன் கொரோனா தொற்றுபரிசோதனை செய்ய வேண்டும் என்பதால், அவருக்கு கொரோனாபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிக்கு கொரோனா சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய நிறைய செலவு ஆகும் என்பதால், அவரை அங்கிருந்து வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு கொரோனா பாதித்தநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை என்று கூறியநிலையில், அவர் கடந்த 16 ஆம் தேதி அன்று ESI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைரொய்ட் பிரச்சினைகள் இருந்ததாலும், கொரோனா பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்கு பின் நிறைய பாதிப்புகள் வர வாய்ப்பு இருந்ததால், முடிந்தவரை கொரோனா பாதிப்பு சரியாகும்வரை, அறுவை சிகிச்சையை ஒத்திவைக்க, மருத்துவக்குழுவினர் ஆலோசித்து முடிவு செய்து, கொரோனா தொற்றுக்கு முதலில் சிகிச்சையை துவங்கினர். 

ஆனால், இரண்டு நாட்கள் சென்ற நிலையில், குடல் இரக்கம் இருந்த இடத்தில் சிறுகுடல் சிக்கிக்கொண்டு அதில் அடைப்பு ஏற்பட்டதால், மலம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.மேலும், குடல் இரக்கத்திற்கு அறுவை சிகிச்சை உடனடியாக செய்யாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில், ESI மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். நிர்மலா, மருத்துவ கண்காளிப்பாளர் மருத்துவர்ரவிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர். தமிழ்ச்செல்வன், மயக்க மருந்துதுறை தலைவர், டாக்டர்.கனகராஜ் மற்றும் இரு துறைகளின் மூத்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவர்கள் நந்தகோபால்பழனிசாமி, செல்வராஜ் மற்றும் கௌதம், அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

தற்போது, அந்த பெண் நல்ல முறையில் உடல் நலம் தேறி வருவதாக இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

Newsletter

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...