கோவை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த வயது முழுமை அடையாமல்,

அதற்கு முன்னதாக நடக்கும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது. இந்து நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 58 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை மட்டும், 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

குழந்தை திருமணம் பற்றி தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். 

குழந்தை திருமணம் நடத்துபவர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனை அல்லது அத்துடன் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

மேலும், குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், புகார்கள் எவ்வகையில் கிடைக்கப் பெற்றாலும், புகாரினை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்க, குழந்தைத் திருமண தடுப்பு அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான புகார்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது தொலைப்பேசி எண் 1098க்கும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...