கோவையில் மீண்டும் பரபரப்பு..! பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதம் - போலீசார் விசாரணை

கோவை: கோவை பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதமடைந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதமடைந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை பெரிய கடை வீதியில் 3 அடி உயரம் கொண்ட சாலையோர விநாயகர் சிலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை விநாயகர் சிலை சேதம் அடைந்து இருந்ததைக் கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து பெரியகடைவீதி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மர்ம நபர்களால் விநாயகர் சிலை திட்டமிட்டு உடைக்கப்பட்டதா? அல்லது ஏதேனும் சாலையில் செல்லும் வாகனம் மோதி உடைந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிலை இருந்த இடத்தின் அருகே இருக்கும் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்‌. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட இந்து அமைப்பினர் சேதமடைந்த விநாயகர் சிலையை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய சிலையை நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு கடப்பாறையை கொண்டு சிலையை சேதப்படுத்தி இருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...