கோவை: மேட்டுப்பளையத்தில் தனியார் விடுதியில் ரகசிய அறைகளை ஏற்படுத்தி அதில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இருவர் கைது-- போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பளையத்தில் தனியார் விடுதியில் ரகசிய அறைகளை ஏற்படுத்தி அதில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இருவர் கைது-- போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் விடுதிகளில் வெளிமாநில பெண்களை ரசசிய அறையில் அடைத்து வைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக, கோவை மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட எஸ்பி அருளரசு அவர்கள் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர், கேசவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கல்லார் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
கல்லார், ரயில்வே கேட் அருகே இருக்கக்கூடிய தனியார் விடுதியில் சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை மேட்டுப்பாளையம் போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்குள்ள, ஒரு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் உள்பகுதியில் ரகசிய வழியை ஏற்படுத்தி, ரகசிய அறைகள் அமைத்து விபச்சாரம்
நடத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விடுதியை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் கணேஷ் என்ற இருவரை கைது செய்தனர்
மேலும், இந்த விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை மீட்ட போலீசார், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு, அனுப்பிவைத்தனர்.
தற்போது, சுற்றுலாவிற்க்கு யாரும் வராத சூழ்நிலையில், அனைத்து தங்கும் விடுதிகளும் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒரு சில தங்கும் விடுதிகள் இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மாதிரி செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், என கோவை மாவட்ட கண்காணிப்பாளர், அருளரசு எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் விடுதிகளில் வெளிமாநில பெண்களை ரசசிய அறையில் அடைத்து வைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக, கோவை மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட எஸ்பி அருளரசு அவர்கள் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர், கேசவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கல்லார் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
கல்லார், ரயில்வே கேட் அருகே இருக்கக்கூடிய தனியார் விடுதியில் சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை மேட்டுப்பாளையம் போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்குள்ள, ஒரு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் உள்பகுதியில் ரகசிய வழியை ஏற்படுத்தி, ரகசிய அறைகள் அமைத்து விபச்சாரம்
நடத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விடுதியை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் கணேஷ் என்ற இருவரை கைது செய்தனர்
மேலும், இந்த விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை மீட்ட போலீசார், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு, அனுப்பிவைத்தனர்.
தற்போது, சுற்றுலாவிற்க்கு யாரும் வராத சூழ்நிலையில், அனைத்து தங்கும் விடுதிகளும் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒரு சில தங்கும் விடுதிகள் இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மாதிரி செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், என கோவை மாவட்ட கண்காணிப்பாளர், அருளரசு எச்சரித்துள்ளார்.