மேட்டுப்பளையயம் தனியார் விடுதியில், முகம் பார்க்கும் கண்ணாடியின் உள்பகுதியில் ரகசிய அறையில் விபச்சாரம்; கோவை எஸ்பி உத்தரவின்பேரில் காவல்துறை கைது நடவடிக்கை!

கோவை: மேட்டுப்பளையத்தில் தனியார் விடுதியில் ரகசிய அறைகளை ஏற்படுத்தி அதில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இருவர் கைது-- போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பளையத்தில் தனியார் விடுதியில் ரகசிய அறைகளை ஏற்படுத்தி அதில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இருவர் கைது-- போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் விடுதிகளில் வெளிமாநில பெண்களை ரசசிய அறையில் அடைத்து வைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக, கோவை மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட எஸ்பி அருளரசு அவர்கள் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர், கேசவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கல்லார் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்லார், ரயில்வே கேட் அருகே இருக்கக்கூடிய தனியார் விடுதியில் சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை மேட்டுப்பாளையம் போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்குள்ள, ஒரு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் உள்பகுதியில் ரகசிய வழியை ஏற்படுத்தி, ரகசிய அறைகள் அமைத்து விபச்சாரம்

நடத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விடுதியை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் கணேஷ் என்ற இருவரை கைது செய்தனர்

மேலும், இந்த விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை மீட்ட போலீசார், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு, அனுப்பிவைத்தனர்.

தற்போது, சுற்றுலாவிற்க்கு யாரும் வராத சூழ்நிலையில், அனைத்து தங்கும் விடுதிகளும் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒரு சில தங்கும் விடுதிகள் இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மாதிரி செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், என கோவை மாவட்ட கண்காணிப்பாளர், அருளரசு எச்சரித்துள்ளார். 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...