முக கவசம் எங்கே..? மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கண்டித்த கோவை மாவட்ட ஆட்சியர்.
கோவை; கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம் பழுதடைந்த காரணமாக, அதை இடிக்கபட்டு நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேற்று, ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்து நிலையத் திறப்பு விழா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியரிடம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலை விவகாரம் தொடர்பான மனுவை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம், அளிக்க வந்தார்.

முககவசம் அணியாமல், மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரிடம், முககவசம் எங்கே..? என ஆட்சியர் வினவியபோது, காரில் வைத்துவிட்டு வந்தகாக கூறினார்.

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு, இறந்து வரும் சூழலில், இப்படி முக கவசம் அணியாமல்வரலாமா..? என ஆட்சித்தலைவர் அவரை கண்டித்தார். அதை, தொடர்ந்து, அவர் முககவசத்தை அணிந்து வந்து, விநாயகர் சிலை அகற்றம் குறித்த மனுவை அளித்தார்.
மனுவை பெற்ற ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.
அப்போது, பேருந்து நிலையத் திறப்பு விழா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியரிடம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலை விவகாரம் தொடர்பான மனுவை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம், அளிக்க வந்தார்.
முககவசம் அணியாமல், மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரிடம், முககவசம் எங்கே..? என ஆட்சியர் வினவியபோது, காரில் வைத்துவிட்டு வந்தகாக கூறினார்.
கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு, இறந்து வரும் சூழலில், இப்படி முக கவசம் அணியாமல்வரலாமா..? என ஆட்சித்தலைவர் அவரை கண்டித்தார். அதை, தொடர்ந்து, அவர் முககவசத்தை அணிந்து வந்து, விநாயகர் சிலை அகற்றம் குறித்த மனுவை அளித்தார்.
மனுவை பெற்ற ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.