கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மூன்று சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி, செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மூன்று சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி, செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொள்ளாச்சியில், மாக்கினாம்பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை, 4 வயது பெண் குழந்தை, 65 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், 67 வயது முதியவர், சின்னாம்பாளையம் பகுதியில் 50 வயது பெண், 48 வயது, ஆண் 76 வயது மூதாட்டி, 30 வயது பெண், 35 வயது பெண், 8 வயது சிறுமி. பொள்ளாச்சி சாலமன் வீதியில் 40 வயது ஆண், சின்னாம்பாளையம் காமாட்சி நகரில் 49 வயது ஆண். குருமபாளையம் பகுதியில் 30 வயது தனியார் மருத்துவர். மேலும் பொள்ளாச்சி திலகர் வீதியைச் சேர்ந்த 55 வயது வாழை இலை வியாபாரி, என இன்று ஒரே நாளில் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், பொள்ளாச்சி திலகர் வீதியைச் சேர்ந்த 55 வயது வாழை இலை வியாபாரி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த 10 ஆம் தேதி முதல், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிருமிநாசினி தெலிக்கபட்டு வருகின்றது. மேலும், பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரிப்பதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சியில், மாக்கினாம்பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை, 4 வயது பெண் குழந்தை, 65 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், 67 வயது முதியவர், சின்னாம்பாளையம் பகுதியில் 50 வயது பெண், 48 வயது, ஆண் 76 வயது மூதாட்டி, 30 வயது பெண், 35 வயது பெண், 8 வயது சிறுமி. பொள்ளாச்சி சாலமன் வீதியில் 40 வயது ஆண், சின்னாம்பாளையம் காமாட்சி நகரில் 49 வயது ஆண். குருமபாளையம் பகுதியில் 30 வயது தனியார் மருத்துவர். மேலும் பொள்ளாச்சி திலகர் வீதியைச் சேர்ந்த 55 வயது வாழை இலை வியாபாரி, என இன்று ஒரே நாளில் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், பொள்ளாச்சி திலகர் வீதியைச் சேர்ந்த 55 வயது வாழை இலை வியாபாரி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த 10 ஆம் தேதி முதல், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிருமிநாசினி தெலிக்கபட்டு வருகின்றது. மேலும், பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரிப்பதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.