இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழக அரசு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் - கோவையில் கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் தமிழக மக்களையும் தமிழக மாணவர்களையும் திட்டமிட்டு வஞ்சித்து வருவதாகவும் அதன் அடிப்படையில் மாணவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் தான் மருத்துவ படிப்பு படிப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் என்ற நுழைவு தேர்வு எனவும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக ஆகக்கூடாது என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உக்கடம் பேருந்து நிலையம் அருகில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், பல மாணவர்கள் போதிய அளவு கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இன்றளவும் தமிழகத்தில் உள்ள மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஒருமித்த கருத்து சமூக நீதிக்கு எதிராக உள்ள நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே.

எனவே, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கொள்கை முடிவெடுத்து நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உயிர்பலி வாங்கும் NEET தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இனி ஒருபோதும் NEET தேர்வின் காரணமாக மாணவர்களின் உயிர் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...