கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு!

கோவை: கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு உதவி கள இயக்குநர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கோவை: கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு உதவி கள இயக்குநர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையை உள்ளடக்கிய பகுதிகளாக ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. வால்பாறை பொள்ளாச்சி, மானாம்பள்ளி, டாப்சிலிப் என 4 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வனத்தை காப்பது, வன விலங்குகளை காப்பது மற்றும் மனித வன உயிரின மோதலை தடுப்பது போன்ற பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்ட உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் அடர்ந்த வனப்பகுதிகளில் பணியாற்றும் வன ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



மேலும், அவர்களின் பணி தொய்வின்றி நடைபெற புதிய சீருடைகள், காலணிகள், தொப்பிகள் வழங்கப்பட்டன. மேலும் பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் சார்பில் வன ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்புடைய மழை கோட்டுகள் வழங்கப்பட்டது.



பின்னர் விழாவில் உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் பேசுகையில், ஒவ்வொரு வன ஊழியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் நம்முடைய ஆனைமலை புலிகள் காப்பகம் மிகச்சிறந்தது என்று பெயரெடுக்க வேண்டும் என்றார். மேலும், நீங்கள் அனைவரும் முழுமையாக ஈடுபாட்டுடன் கடமையை செய்ய வேண்டும் எனவும் உங்களுடைய தேவையை அறிந்து செய்து தரப்படும் என்று கூறினார்.

இந்த விழாவில் பொள்ளாச்சி கோட்ட உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள், வனவர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் தர்மராஜ், ஸ்ரீனிவாசன், மோகன்குமார், கமலக்கண்ணன், அன்புச்செல்வன், எம்.மோகன் குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...