கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பாண்டுரங்கன் வீதி பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர் சின்னதுரை. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்ற அவர் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 193 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பாண்டுரங்கன் வீதி பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர் சின்னதுரை. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்ற அவர் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 193 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பில் சேர, மாணவர் முயன்றுள்ளார். அப்போது, அவர் மாற்று திறனாளி என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, டவுன் ஹால் பகுதியில் இயங்கும் மாற்று திறனாளிகள் பள்ளியில் சேர்ந்து கொள்ளுமாறு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாக மாணவரின் சகோதரர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில் தனது சகோதரர் மாற்று திறனாளி என்பதால் அவர்களுக்கு அருகில் உள்ள ராமநாதபுரம் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் பயில வாய்ப்பு அளிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
இது குறித்து, கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை முதன்மை அலுவலருக்கு தகவல் அளிக்கபட்டு உள்ளதாகவும், மாணவரை பள்ளியில் சேர்த்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த, மாவட்ட வருவாய் துறை அதிகாரி, ராமதுரை முருகன், அந்த மாற்று திறனாளி மாணவருக்கு அவர் கேட்கும் பள்ளியிலேயே படிக்க ஆவணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.