கோவை: மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த ராஜமலை எஸ்டேட் தொழிலாளர்களின் திருவுருவ படங்களுக்கு வால்பாறையில் மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை: மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த ராஜமலை எஸ்டேட் தொழிலாளர்களின் திருவுருவப் படங்களுக்கு வால்பாறையில் மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை வால்பாறையில் உள்ள டாக்ஸி, வேன், டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக மூணாறு பகுதியிலுள்ள ராஜமலை எஸ்டேட் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு அதில் உயிரிழந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வால்பாறை நகரக்கூட்டுறவு வங்கியின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை வால்பாறையில் உள்ள டாக்ஸி, வேன், டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக மூணாறு பகுதியிலுள்ள ராஜமலை எஸ்டேட் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு அதில் உயிரிழந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வால்பாறை நகரக்கூட்டுறவு வங்கியின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.