பொள்ளாச்சி ஆழியார் அணை 101 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி ஆழியார் அணை 101 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி, ஆழியார் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் இருந்து வந்தது. இந்நிலையில், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான காடம்பாறை, அப்பர் ஆழியார், கவர்க்கல், சக்தி எஸ்டேட்உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை தற்போது 101 அடியை எட்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒரு சில தினங்களில் ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...