பொள்ளாச்சி ஆழியார் அணை 101 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி, ஆழியார் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் இருந்து வந்தது. இந்நிலையில், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான காடம்பாறை, அப்பர் ஆழியார், கவர்க்கல், சக்தி எஸ்டேட்உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை தற்போது 101 அடியை எட்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒரு சில தினங்களில் ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி, ஆழியார் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் இருந்து வந்தது. இந்நிலையில், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான காடம்பாறை, அப்பர் ஆழியார், கவர்க்கல், சக்தி எஸ்டேட்உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை தற்போது 101 அடியை எட்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒரு சில தினங்களில் ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.