கோவை: திட்டமிடாத பாதாள சாக்கடை பணிகளால் மக்களின் வரிப்பணம் வீண் ஆவதாக குற்றம் சாட்டி, பொள்ளாச்சியில் திமுகவினர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: திட்டமிடாத பாதாள சாக்கடை பணிகளால் மக்களின் வரிப்பணம் வீண் ஆவதாக குற்றம் சாட்டி, பொள்ளாச்சியில் திமுகவினர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு
தொடங்கப்பட்டது. மேலும், தார் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நான்காண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, கடைவீதி, புதிய திட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை சாலைகள் தோண்டப்பட்டு குழிகள் பல மாதங்களாகியும் மூடப்படாமல் பணிகள் நடைபெறாமல் தேங்கி உள்ளது, என திமுகவினர் குற்றம் சாட்டினர்.
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை குழி தோண்டும்போது, குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு நகர பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இப்படி, சேதமடைந்த சாலைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர், என்று தெரிவித்தனர்.
எனவே, நான்காண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றும் முறையாக திட்டமிடாததால் இன்று பொள்ளாச்சி நகரமே பாதாளம் போல் காட்சி அளிப்பதாக, தெரிவித்த திமுகவினர், தமிழக அரசின் அலட்சியத்தால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக தெரிவித்தனர்.
இதை கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நிர்வாகிகள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர திமுக அவைத்தலைவர் வடுகை பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு
தொடங்கப்பட்டது. மேலும், தார் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நான்காண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, கடைவீதி, புதிய திட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை சாலைகள் தோண்டப்பட்டு குழிகள் பல மாதங்களாகியும் மூடப்படாமல் பணிகள் நடைபெறாமல் தேங்கி உள்ளது, என திமுகவினர் குற்றம் சாட்டினர்.
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை குழி தோண்டும்போது, குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு நகர பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இப்படி, சேதமடைந்த சாலைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர், என்று தெரிவித்தனர்.
எனவே, நான்காண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றும் முறையாக திட்டமிடாததால் இன்று பொள்ளாச்சி நகரமே பாதாளம் போல் காட்சி அளிப்பதாக, தெரிவித்த திமுகவினர், தமிழக அரசின் அலட்சியத்தால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக தெரிவித்தனர்.
இதை கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நிர்வாகிகள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர திமுக அவைத்தலைவர் வடுகை பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.